காலை வணக்கம்
இன்றைய பாடல் :சுந்தரி கண்ணால் ஒரு சேதி
படம் : தளபதி 1991
பாடியவர்கள் : எஸ் . பி .பி , எஸ். ஜானகி
இசை : இளையராஜா
“ஒரு ஒரு ஊர்ல ஒரு ராஜாவாம் அவனுக்கொரு தளபதியாம்” என்று குழந்தைகளுக்கு ஒரு கதை சொல்லலாம் இந்தப் பாடலை வைத்து . ஆனால் இது ஒரு ஃபேரி டேல்! ..தளபதியினதும் அவன் காதலியுடையதுமானது . வீரமும் காதலும் செரிந்த ஒரு பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையில் படமாக்கப்பட்டுள்ள பாடல் .
பாடலின் துவக்கத்தில் ..ஓடி வரும் ஷோபனாவை அலக்காக தளபதி தூக்கி குதிரையில் வைப்பது பல ஆங்கிலப்படங்களில் பார்த்த ஒரு காட்சி தான் என்றாலும் மனதை அள்ளத்தான் செய்கிறது . ஜானகியின் குரலில் காதலும் தாபமும் அப்படி போட்டி போடுகிறது.
உயரமும் மெலிவும் கொஞ்சம் அதீதம் தான் என்றாலும் பாத்திரத்துக்கேற்ற சோகையான அழகி ஷோபானா . காதோடிய கண்கள் ,அம்சமான ஃபீசர்ஸ் , அழகான முகபாவங்கள் ! நடனக் கலைஞராச்சே ! உடையலங்காரமும் லொகேஷனும் பிரமாதம் . தளபதியின் ஹேர் ஸ்டைல் கொஞ்சம் நகைப்பு ஊட்டுகிறது . மற்றபடி வெகு அழகான பாடல் .
தலைவன் உடனிருக்கும் போது கசிந்துருகுவதாகட்டும் பிரிவின் விரகமும் சரி பின்னி எடுக்கிறார் ஷோபனா . தமிழ் சினிமா பாடல்களிலேயே மோஸ்ட் ரொமான்டிக் சாங்க் இது தான் என்று நினைப்பதுண்டு . பாடல் வரிகள் , இசை என்று எல்லாமும் நிறைவாக இருப்பது காரணம் என்றாலும் ஷோபனா மிக முக்கியமான ஒரு காரணம் என்று நினைக்கிறேன் ! அசல் சுந்தரி இவர் …
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
நானுனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே
சுந்தரி கண்ணால் ஒரு சேதி…
வாய் மொழிந்த வார்த்தை யாவும்
காற்றில் போனால் நியாயமா
பாய் விரித்துப் பாவை பார்த்த
காதல் இன்பம் மாயமா
ஆ..வாள் பிடித்து நின்றால் கூட
நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட
ஜீவன் உன்னைச் சேர்ந்திடும்
தேனிலவு நான் வாட ஏனிந்த சோதனை
வான் நிலவை நீ கேளு கூறும் என் வேதனை
எனைத் தான் அன்பே மறந்தாயோ
மறப்பேன் என்றே நினைத்தாயோ
சுந்தரி கண்ணால்…
சோலையிலும் முட்கள் தோன்றும்
நானும் நீயும் நீங்கினால்
பாலை எங்கும் பூக்கள் ஆகும்
நீ என் மார்பில் தூங்கினால்
ஆ..வாரங்களும் மாதம் ஆகும்
நானும் நீயும் நீங்கினால்
மாதங்களும் வாரம் ஆகும் பாதை மாறி ஓடினால்
கோடி சுகம் வாராதோ நீ எனைத் தீண்டினால்
காயங்களும் ஆறாதோ நீ எதிர் தோன்றினால்
உடனே வந்தால் உயிர் வாழும்
வருவேன் அந்நாள் வரக்கூடும்
சுந்தரி கண்ணால் ஒரு சேதி ..
thaedhi
ennaiyae thandhaen unakkaaga jenmamae kondaen
adharkaaga
naanunai neengamaattaen neenginaal thoongamaattaen
saerndhadhae nam jeevanae(sundhari)vaay mozhindha vaarththai yaavum kaatril poanaal
niyaayamaa
paay viriththup paavai paarththa kaadhal inbam
maayamaa
a a a vaalpidiththu ninraal kooda nenjil undhan
oorvalam
poarkkalaththil saayndhaal kooda jeevan unnaich
chaerndhidum
????(sundhari)soalaiyilum mutkal thoanrum naanum neeyum neenginaal
paalayengum pookkal aagum nee en maarbil thoonginaal
a a a vaarangalum maadham aagum naanum neeyum
neenginal
maadhangalum vaaram aagum paadhai maari oadinaal
koadi sugam vaaraadhoa nee enaith theendinaal
kaayangalum aaraadhoa nee edhir thoanrinaal
udanae vandhaal uyir vaazhum
varuvaen annaal varakkoodum
(sundhari)
tags,
thalapathi, thalabathi, rajini, shobana, manirathnam, ilaiyaraja, janaki, s.janaki, s.p.b, s.p. balasubramaniam, sugaragam, kalaip paniyum konjam isaiyum
தளபதி , ரஜினி, ஷோபனா, மணிரத்னம், இளையராஜா, எஸ். ஜானகி, எஸ். பி.பி, எஸ். பி. பாலசுப்ரமணியம் , சுகராகம், காலைப் பனியும் கொஞ்சம் இசையும்
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments