குருப் பெயர்ச்சி பலன்கள் - 2013: துலாம் : விசாகம்(4); அனுஷம்; கேட்டை: இந்த வருடம் மே மாதம் 27-ம் தேதியன்று குருப்பெயர்ச்சியாகும்போது குரு உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் சஞ்சரிப்பதால், குரு ‘அஷ்டம குரு’வாகிறார். அதனால், சில பாதிப்புகள் தோன்றலாம். எதுவும் உங்கள் ஜாதகப்படி அமையும் என்பதால், அதையும் கணக்கில் கொள்ளுங்கள். சிலருக்கு கடன் தொல்லை இருந்துகொண்டே இருக்கும். அதன் காரணமாக அவமானங்களையும் , மனக் கவலையும் சுமந்தபடியே இருப்பர். உங்களுக்கு நிதிநிலைமை நன்றாகவே இருந்தாலும்கூட உங்கள் பணம் எதிலாவது முடங்கிப்போவதால், பணப் பிரச்சினை… Read more →
குருப் பெயர்ச்சி பலன்கள்: துலாம்: சித்திரை (3&4);சுவாதி ;விசாகம்( 1,2&3) ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது. வருகிற மே மாதம் 27ம் தேதி நிகழப்போகிற குருப் பெயர்ச்சியின்போது, குரு பகவான் ராசிக்கு ஒன்பதாம் இடமான மிதுனத்தில் சஞ்சரிக்கிறார். இதுவரை நீங்கள் அனுபவித்து வந்த தொல்லைகளிலிருந்தெல்லாம்உங்களுக்கு விடுதலை கிடைக்கப்போகிறது. எந்தப் பக்கம் திரும்பினாலும் கஷ்டங்களும் வேதனைகளும் இருந்துவந்த நிலை மாறி, இனி நல்ல காலம் பிறக்கும். மிதுனத்துக்கு வருகிற குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் 1வருட காலம் சஞ்சரிக்கப் போகிறார். குரு பகவான் தன்னுடைய புனிதமான 5-ம் பார்வையால், உங்கள் ராசியையும், 7-ம் பார்வையால் உங்களுடைய 3-ம் இடத்தையும் ,தன்னுடைய 9-ம் பார்வையால் உங்களுடைய 5-ம் இடத்தையும்பார்வையிடுகிறார். இதன்காரணமாக இந்த இடங்கள் எல்லாம் வலிமையடையும்.சனி பகவான் இப்போது ஏழரைச்சனியில் , ஜென்ம சனியாக சஞ்சரித்து , உங்களுக்கு சோதனைகளைக் கொடுத்தாலும்கூட குருபகவானால், சனிபகவானுடைய தீய பலன்கள் கட்டுப்பட்டு கெடுபலன்களை ஏற்படுத்தாது என்பதை இங்கே குறிப்பிடவேண்டும். இந்தக் குருப் பெயர்ச்சியினால் உங்களுக்கு சகல சம்பத்தும் கிடைக்கும். முகம் ஒளிபொருந்தியதாக இருக்கும். முகத்தில் தேஜஸ் ஏற்படும். உடல் நலம் பெறும். இதுவரை வெளி உலகுக்குத் தெரியாமல்இருந்துவந்த உங்களுடைய திறமைகள் இப்போது அனைவருக்கும் தெரிய ஆரம்பித்து பலருடைய பாராட்டுக்கும்ஆளாவீர்கள். சமுதாயத்தில் உங்கள் மதிப்பு உயரும். சிலருக்கு கௌரவப் பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும்.எண்ணங்களில் உயர்வும் மேன்மையும் இருக்கும். கௌரவம், அந்தஸ்து மேலோங்கும். சொன்ன வாக்கைக் காப்பாற்றிநீங்கள் நாணயமிக்கவர் என்று அனைவராலும் அறியப்படுவீர்கள தொழில், வியாபாரம் மேன்மையடையும். சிலருக்கு புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புஏற்படும். இதனால் தேவைக்கேற்ற வருமானம் பெருகும். பொருளாதார நிலை சீரடையும். அலுவலகப்பணியாளர்களுக்கு இது ஒரு சிறப்பான காலம். மேலதிகாரிகள் உங்கள் திறமையைப் பாராட்டுவார்கள். அலுவலகத்தில்வேலைப்பளு குறையும். சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். சிலருக்கு உத்தியோக உயர்வுகிடைக்கும். வெளியூரில் பணியாற்றிக்கொண்டிருந்தவர்களுக்கு சொந்த ஊருக்கு மாற்றலாகி வர வாய்ப்பு உருவாகும்.சிலருக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். உங்களை அனைவரும் நேசிக்க ஆரம்பிப்பார்கள். நீங்கள் எல்லோரிடமும் அன்பாக நடந்துகொள்வீர்கள். வீட்டிலுள்ளவர்களின் தேவைகளை காலம் அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். இதன் காரணமாககுடும்பத்தாரின் அன்புக்கும் ஆதரவுக்கும் பாத்திரமாவீர்கள். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். மாணவர்கள் கல்வியில் மேன்மையடைவார்கள். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப்பெறுவார்கள். வேலை தேடிக்கொண்டு இருந்தவர்களுக்கு நல்ல சம்பளத்தில், கல்விக்கேற்ற ஊதியம் கிடைக்கும்.திருமணத்துக்கு காத்திருப்பவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும். மனம் விரும்பும் வண்ணம் நல்ல வாழ்க்கைத்துணையும் அமையும். குழந்தை இல்லாமல் கவலைப்பட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு புத்திரப்பேறு கிடைக்கும்.உங்களுடைய பிள்ளைகள் மேன்மையடைவார்கள். அவர்கள் வேலை பார்க்கும் இடங்களில் பதவி உயர்வு, ஊதியஉயர்வு கிடைக்க வாய்ப்புகள் ஏற்படும். அவர்கள் புதிய தொழில் தொடங்குவார்கள். புத்திர-புத்திரிகளுக்கு திருமணம்போன்ற சுபகாரியங்கள் தடைப்பட்டிருக்குமானால், தடைகள் நீங்கி சுபகாரியங்கள் நடந்தேறும். சிலருக்கு கோயில் கட்டுவதற்கான பொறுப்புகளும், கோயிலில் கௌரவப் பதவிகளும் பாராட்டுகளும்கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். தெய்வ காரியங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். சிலர் விட்டுப்போனகுலதெய்வ வழிபாட்டைத் தொடருவார்கள். ஞானிகள், சாதுக்களின் தரிசனமும் கிடைக்கும். அவர்களின் ஆசீர்வாதம்கிடைக்கும். சிலர் கோயில் கட்டும் பணியில் பங்கு பெறுவார்கள்.சிலருக்கு தீர்த்த யாத்திரை , புனிதப் பயணம் போன்றவாய்ப்புகள் கிடைக்கும். இதுவரை உங்களுக்கு வருத்தம் அளித்துவந்த கோர்ட் கேஸ்கள் இப்போது முடிவுக்கு வரும். அந்தவழக்குகளின் தீர்ப்பும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கீழ்க்கோர்ட்டில் தண்டனை பெற்ற சிலர் மேல்கோர்ட்டில்விடுதலையாவார்கள். நீங்கள் எதிர்பார்த்த இடங்களிலிருந்து பணம் கிடைக்கும். இதுவரை தொல்லை கொடுத்துவந்தநோய்கள் நீங்கி நலம் பெறுவீர்கள். பொருளாதார மேம்பாடு இருக்கும். விரயச்செலவு குறையும். குடும்பத்தில் இருந்துவந்தவீண்வாக்குவாதங்கள் குறையும். வீட்டில் அமைதியும் சந்தோஷமும் தாண்டவமாடும். வாழ்க்கத் துணையின்உடல்நலம் நன்றாக இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும்.தாயார் உடல் நலம் சிறக்கும். தாய் வழியில் சில உதவிகளும் கிடைக்கும். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள்.தந்தையும் மேன்மையடைவார். தந்தையின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அரசு அதிகாரிகளாலும்அரசியல்வாதிகளாலும் நன்மைகள் கிடைக்கும். சிலருக்கு பழைய கட்ன்கள் அடைபடும். புதிதாக வங்கிக்கடன்கள்கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். மருத்துவச் செலவு குறையும். எதிரிகள் உங்களுக்கு எதிராக செய்யும் காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்களுடைய மேம்பாட்டுக்கே வழிவகுக்கும். சிலருக்கு பொருளாதாரப் பிரச்சினையால் தடைப்பட்டிருந்த வீடுகட்டும் பிரச்சினைகள் மீண்டும்தொடங்கி நடக்கும். அதற்கான வங்கிக்கடன் எளிதாகக் கிடைக்கும். சிலர் வீடு மனை வாங்கும் வாய்ப்பைப்பெறுவார்கள். சிலர் விருந்து கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சியடைவார்கள். இதுவரை கிணற்றில்போடப்பட்ட கல்லாக மறைந்துகிடந்த பிரச்சினைகள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக தீர்க்கப்படும். குரு பகவானின் இந்த சஞ்சாரத்தின்போது நீங்கள் எழுத்துத் துறையிலும் பிரகசிக்க முடியும். சிலர் வெளிநாடு சென்று அகில உலக அளவில் தங்கள் படைப்புகளுக்காக விருது பெற முயன்று வெற்றியும்பெறுவார்கள். மிகவும் பிரபலமான பலகலைக் கழகங்கள் உங்களை உங்கள் படைப்புகளுக்காக கௌரவிக்கும்யோகமும் கடும் முயற்சிக்கு கிடைக்கலாம். எனவே உங்கள் எழுத்துத் திறமையை நீங்கள் வளர்த்துக்கொள்ளலாம். மொத்தத்தில் இது உங்களுக்கு யோகமான காலம். குரு பகவான் 14.11.13.முதல் 12.3.14 வரை வக்கிர சஞ்சாரம் செய்யப் போகிறார். குருவின் வக்கிர காலக் கட்டங்களில்இப்போது சொல்லிய அனைத்துக்கும் நேர்மாறான பலன்களாக நிகழும். அந்த நேரத்தில் எந்தப் புது முயற்சியும்தொடங்காமல் பொறுமைகாத்து இருப்பதும், நன்கு திட்டமிட்டபின் எதிலும் இறங்குவதும் கஷ்டங்களைக்குறைக்கும்.இந்த நெரத்தில் வரவும் சீவும் சரியாக் இருக்கும். உங்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் உங்களைவிட்டுப் பிரிய நேரலாம். பிள்ளைகளிடம் அன்பு காட்டினாலும் கொஞ்சம் சமாளிப்பது கடினமானதாக இருக்கும். தகப்பனாரின் ஆரோக்கியம் கவலையளிக்கும். அவருடைய போக்கில் சில மாறுதல்கள் தென்படும். பரிகாரம்: வியாழக் கிழமைகளில், தட்சிணாமூர்த்திக்கு கொண்டக்கடலை மாலையும் பொன்னரளிப்பூ மாலை அல்லது மஞ்சள்நிறப்பூ மாலையும் அணிவித்து வழிபட்டால் தொல்லைகள் பறந்தோடும். பிரசித்தி பெற்ற திருத்தலங்களுக்கு சென்றுபகவானைத் தரிசித்து வரவும்.சனி பகவானின் சஞ்சாரம் சரியில்லாததால், சனிக் கிழமைதோறும், சனீஸ்வரன்ஆலயம் சென்று எள்தீபம் ஏற்றி வழிபடுங்கள். துன்பங்கள் உங்களை அண்டாது. வாழ்க வளமுடன்!
நந்தன ஆண்டு புத்தாண்டு பலன் துலாம் ராசி tamil new year 2012 thula rasi புத்தாண்டு பலன்கள் tamil new year 2012 : துலாம் : சித்திரை(3&4); ஸ்வாதி; விசாகம்(1,2&3): இந்த வருடம் மே மாதம் 17-ம் தேதியன்று குருப்பெயர்ச்சியாகும்போது குரு உங்கள் ராசியில் சஞ்சரிப்பதால், குரு ஜென்ம குருபவாகிறார். அதனால், சில பாதிப்புகள் தோன்றலாம். எதுவும் உங்கள் ஜாதகப்படி அமையும் என்பதால், அதையும் கணக்கில் கொள்ளுங்கள். சிலருக்கு கடன் தொல்லை இருந்துகொண்டே இருக்கும். அதன் காரணமாக அவமானங்களையும் ,… Read more →
2012 ராசி பலன் – துலா ராசி 2012 ஆண்டு பலன் – thulam rasi palan புத்தாண்டு பலன்கள்: துலாம்:சித்திரை(3&4);சுவாதி; விசாகம்(1,2 & 3 ): ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது இந்த புது வருடம் 2012 உங்களுக்கு நல்ல பலன்களாகவே நடக்கும் . இந்த ஆண்டு தொடங்குமுன்பே, சனி பகவான் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிக்க ஆரம்பித்திருக்கிறார். குரு பகவான் ஆண்டின் முற்பாதியில் அதாவது மே மாதம் 16-ம் தேதி வரையில் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். அதன்பின் அதாவது மே… Read more →
துலாம்: {சித்திரை 3&4 பாதங்கள்; ஸ்வாதி, விசாகம் 1,2,&3 பாதங்கள் ஆகிய நட்சத்திரங்கள் அடங்கியது. } துலாம்: சித்திரை (3&4),ஸ்வாதி’ விசாகம் (1,2&3) ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது. துலாம்: உடல்நலம் ஒத்துழைப்பு தராது. தியானம் செய்வது நல்லது. யாருக்கும் தகுதிக்கு மீறிய வாக்குறுதியைத் தரக்கூடாது. நன்கு யோசித்துச் செய்யும் செயல்களால் வெற்றி கிடைக்கும். பூர்வீகச் சொத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும். புத்திரர்களால் பெறுமை கிடைக்கும். தம்பதியர் தியாக மனப்பான்மையுடன் நடந்துகொள்வர். வாகனம் இயக்குவதில் நிதானம் தேவை. பாதுகாப்பு குறைவான இடங்களில் பிரவேசிக்ககூடாது. அரசிடமிருந்து எதிர்பார்த்த… Read more →
துலாம் இதுவரை உங்கள் ராசிக்கு விரயஸ்தானத்தில் சஞ்சரித்துவந்த சனிபகவான் இப்போது ஜென்மஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். இதற்குமுன் விரயஸ்தானத்தில் இருந்தபடி உங்களுக்கு கடுமையான பலன்களைக் கொடுத்த சனி பகவான் இனி இரண்டாவது இரண்டரையில் அதாவது ஜென்ம ஸ்தானத்தில் பிரவேசிப்பது எப்படியிருக்கும் என்பதைப் பார்க்கலாம். இதுகாறும், குடும்பத்திற்காகவும், தன்னை அண்டியிருக்கும் பெற்றோர், சகோதர சகோதரிகளுக்காகவும், மாமன், அத்தை, பாட்டி. தாத்தா இவர்களுக்காகவும் ஏதோ ஒரு வகையில் விரயம் செய்து , கடன் காட்சி என்று அவஸ்தையுற்றிருந்தால், இவற்றுக்கு ஒரு விமோசன காலம் பிறந்துவிட்டது. கடன்கள் பைசலாகும். நஷ்டங்கள்… Read more →
சமீபத்திய பின்னூட்டங்கள்