
ரஜினி பிறந்தநாள் வந்தாலும் வந்தது நம் ரஜினி ரசிக (பக்த)னின்அலப்பரை தாங்க முடியல . ஃபேஸ்புக்கைத் திறந்தால் ரஜினி , மூன்றாம்கோணத்தில் ரஜினி பிறந்த நாள் பஞ்ச்டயலாக் போட்டி , தொலைக்காட்ச்சியிலும் எந்த சானலைத்திறந்தாலும் ரஜினி மகாத்மியம் பேசும் ரசிகர்கள், காம்பயர்கள் , சக நடிகர்கள் . இப்படி ஒரு ஹீரோ வர்ஷிப் கலாச்சாரம் உலகின் வேறெந்த மூலையிலாவது காணப்படுமா தெரியவில்லை . ஒரு எழுத்தாளனுக்கு , ஒரு சிந்தனாவாதிக்கு , ஒரு அறிவு ஜீவிக்கு ,இவருக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தில், மரியாதையில் நூறில் ஒரு பங்கு கொடுக்கப்பட்டால் நாடு உருப்படுமே !
லேட்டஸ்ட்டாக முகநூலில் ஒரு புகைப்படம் ஆளாளுக்கு ஷேர் செய்து உருகிக் கரைகிறார்கள் . ” thalaivar the epitome of simplicity ” அதாவது அவர் ஒரு சாதாரண கம்பெனி செருப்பு அணிந்திருக்கிறாராம் ! எளிமையின் மொத்த உருவமே தலைவர் தானாம் ! வெட்கமாக இருக்கிறது . அவர் எந்த செருப்பு அணிந்தால் என்ன ? செருப்பே அணியாமல் இருந்தால் நமக்கு என்ன ?
விஜய் டிவியில் அவர் மகள் ஐஷ்வர்யாவை, காம்பயரர் ரம்யா ரஜினியைப் பற்றி ஒரு வரியில் சொல்லுங்கள் என்றதற்கு—- –அம்மணிக்கு தமிழில் சொல்லத் தெரியாதாம். ஆங்கிலத்தில் சொன்னதை ரம்யா மொழிபெயர்த்தார் .அதாவது “வீட்டில் ஒரு வாழும் தெய்வம் ” என்றார் . அவரவருக்கு அவரவர் அப்பா தெய்வம் தான் .இதை ஒரு டிவி சானலில் வந்து சொல்ல வேண்டிய அவசியம் பற்றி வெகு நேரம் யோசித்து மண்டை புண்ணானது தான் மிச்சம் .
எந்த ஒரு சமூகப்பிரச்சினைக்காகவோ மக்கள் இயக்கத்துக்காகவோ அவர் இது வரையில் உரத்து குரல் கொடுத்திருக்கிறாரா ? எளிமையாக செருப்பு அணிவது சரி ,அவருக்கு வந்த அதே வியாதி ஒரு சாதாரணனுக்கு வந்திருந்தால் அவர் இந்நேரம் உயிரோடு இருக்க முடியுமா ? ராஜ வைத்தியம் செய்து கொண்டவர் ரப்பர் செருப்பு அணிவது பற்றியெல்லாம் சிலாகித்துத் தொலைவதை எப்போது நிறுத்துவாய் தமிழ் ரசிகா ?
சர்வசாதாரணமாக பெண்களைக் கை நீட்டி அடிப்பது போலவும் , ஏதோ திமிர் பிடித்த , பணக்காரக் கதாநாயகியரை அடக்கி , மிரட்டி , பணிய வைத்து பிறகு கட்டிப்பிடித்தோ , கன்னத்தில் அறைந்தோ காதல் வயப்படுத்துவதை ஒரு ட்ரெண்டாகவே செய்து வந்தவர் இல்லையா ரஜினி ? இது தான் ஒரு தலைவனுக்கு அழகாமா ? அடேங்கப்பா ! தமிழ் ரசிகா என்னே உன் ரஜினி பக்தி ?
முல்லைப்பெரியார் பிரச்சினையில் நாடே பற்றிக்கொண்டு எரிகிறது .கல்கத்தாவில் மருத்துவமனை பற்றி எரிந்து ,கொடூரமாய் ,காப்பாற்றப்பட வேண்டி நோயாளியாக அனுமதிக்கப்பட்டவர்கள் அநியாயமாய் எரிந்து போனார்கள். நம் ரஜினி ரசிகன் அவர் செருப்பின் எளிமையை எண்ணி மெய்சிலிர்த்துக் கொண்டு இருக்கிறான் !
வாழ்வின் அத்தனை சுகங்களையும் அனுபவித்து முடிந்தவர் அவர் ! இப்போதைய வாழ்நாட்களும் கூட இறைவனின் கொடை தானே அவருக்கு ! விடுங்கப்பா …போய் வேறு வேலை இருந்தால் பாருங்கள் !
எரிச்சலுடன்
..ஷஹி..
tags
rajini, rajini birthday , aishvarya, rajni fan, rajini fan , ramya, rajinikanth
ரஜினி, ரஜினி பிறந்தநாள் , ரஜினி ரசிகன், ரஜினிகாந்த், ரம்யா , ஐஷ்வர்யா
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments




true shahi. hats off on ur words
thank u indu..
super, good post
thank u mr. anonymous
ஷஹி,
உங்கள் கட்டுரைக்கான பதில் ஒரு பின்னூட்டத்துக்குள் அடங்காததால் ஒரு தனி பதிவே போட்டிருக்கிறேன்
http://moonramkonam.com/2011/12/article-replying-to-rajini-birthday-celebrationessay/
நானும் ரெடி அபி சண்டைக்கு ..வாங்க , வாங்க ..
நண்பர் அபி :
அவர்களே மிக நன்றாய் எழுதுனீர்கள், நானும் இதை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் தாங்களே மிக சரியாய், ஒரு ரசிகனின் மனதில் உள்ள வார்த்தைகளை எழுதிவிட்டீர்கள் இனி நான் என்ன எழுதுவேண்டும் அருமை அருமை. எந்த ஒரு உறவும், பந்தமும், பாசமும் இல்லாமல் நாம் எப்படி இப்படி ஒரு வார்த்தை விவாதத்தை பகிர்ந்து கொள்கிறோம் அதுதான் “ரஜினி” என்ற “காந்தம்”
அதே அன்புடனும்
க.சவரீசன்.
ரஜினி என்ற மந்திரத்தை நீங்களும் உபயோக படுத்தி தானே பதிவுகள் எழுதுகிறீர்கள்.ஒரு குப்பனோ சுப்பனோ உங்களுக்கு கண்ணுக்கு தெரியுமா…? உங்களின் பதிவு பல பேரை சென்றடைய அவரின் பெயர் தானே காரணம் …..?
என்ன சொல்ல வரீங்க ஜீவா ? ரஜினி என்ற மந்திரத்தை உபயோகம் செய்ய வேண்டிய அவசியமே இல்லையே இங்கே ? எங்கள் மற்ற பதிவுகள் யாரையுமே சென்று சேர்ந்ததில்லையா ? புரியவில்லை உங்கள் பின்னூட்டம் !மனதில் பட்டதை சொல்லியிருக்கிறேன் ..புரியுமாறு எதிர்வினையிட்டிருக்கலாம் நீங்கள் !
கட்டுரை சரியான சாட்டையடி தான்.. ஆனால் ரஜினியின் பிறந்த நாள் அன்று இதை வெளியிட்டிருக்க வேண்டுமா?
அவர் பிறந்தநாள் அன்று வெளியிட்டிருக்க வேண்டாம் என்று பலரும் சொல்லும் போது தான் என்னவோ போல இருக்கிறது . நான் இந்த செய்தியைப் பார்த்ததும் எழுதிவிட்டேன் ..அவ்வளவு தான் . மற்றபடி வேண்டும் என்று ஒன்றும் செய்யவில்லை . உங்கள் கருத்துக்கு நன்றி சி . பி ..
எவ்வளவோ பதிவுகள் எழுதி இருக்கலாம் ..ஆனால் அனைத்தும் இது போல பிரபலம் அடைந்து இருக்குமா என்பது சந்தேகமே …ரஜினி என்ற ஒரு சொல் தான் உங்களை பிரபல படுத்துவதற்கும் பயன் படுகிறது
ரஜினி ஐ வைத்து பதிவு எழுத வேண்டிய அவசியம் என்ன ? உங்கள் பதிவு HIT ஆக வேண்டும் என்று தானே…இந்த பதிவையே நீங்கள் RAJINI என்ற HEADING இல்லாமல் எழுதி இருக்க முடியும். ஆனால் உங்களுக்கு தெரியும் . RAJINI என்ற MAGICAL WORD க்கு இருக்கும் பவர்.புரியாத உங்களுக்கு என்ன கமெண்ட் போட்டாலும் இப்படிதான் குதர்க்கமாய் சொல்வீர்கள்…
நீங்கள் சொல்லியபடி RAJINI என்ற பெயர் MAGICAL WORD என்றால் பெயருக்கு சொந்தக்காரர் ஒரு கண்கட்டி வித்தைக்காரர் தான்.
நாங்கள் வித்தையை ரசிப்போம் but நம்ப மாட்டோம்.
உலகத்தில வேற எங்காவது செருப்பு போட்ட நபரை பத்தி எழுத வேண்டியது தானே …இவரு தான் உங்க கண்ணுக்கு தெரிஞ்சாரா..?நீங்க எவ்ளோதான் தரக்குறைவா எழுதினாலும் எங்களுக்கு அவர் எப்பொழுதுமே சூப்பர் ஸ்டார் தான்.உங்களை போல ஆட்கள் திட்டி எழுதுவதற்கு கூட அவர் தேவை படுகிறார்.அவரின்றி ஓர் அணுவும் அசையாது …
Jeeva,
ரஜினியின் சுய நலத்தை இங்கே பார்க்கவும்
http://lollushabha.blogspot.com/2011/12/blog-post_15.html
“ஊருக்கு தான் உபதேசம் எனக்கு இல்லை” – ரஜினி
நண்பர் ஜீவா :
அவர்களே மிக நன்றாய் எழுதுனீர்கள், நானும் இதை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் தாங்களே மிக சரியாய், ஒரு ரசிகனின் மனதில் உள்ள வார்த்தைகளை எழுதிவிட்டீர்கள் இனி நான் என்ன எழுதுவேண்டும் அருமை அருமை. எந்த ஒரு உறவும், பந்தமும், பாசமும் இல்லாமல் நாம் எப்படி இப்படி ஒரு வார்த்தை விவாதத்தை பகிர்ந்து கொள்கிறோம் அதுதான் “ரஜினி” என்ற “காந்தம்”
அதே அன்புடனும்
க.சவரீசன்.
எவ்வளவோ செய்தி பார்க்கிறீர்கள்..இது மட்டும் தான் தெரிந்தது என்றால் அப்போ மத்த செய்திகள் எதுவும் உங்களை இம்ப்ரெஸ் பண்ணவில்லையா….
மிக்க நன்றி ஜீவா புரியவில்லை என்றதும் விபரமாக எழுதியதற்கு..மறுபடியும் இதே விஷயம் எழுத வேண்டாமே என்று பார்க்கிறேன்..ரஜினி பற்றிய ஒரு பதிவுக்கு அதல்லாமல் என்ன தலைப்பு வைக்க முடியும் ? சரி ..அடுத்த முறை உங்களிடம் கேட்டு விட்டு தலைப்பு வைகிறேன் ? டீல் ?
மூன்றாம் கோணம் என்ற ப்ளாக்கினை ரஜினி என்ற தலைப்பு இருந்ததினால் மட்டுமே நான் வாசித்தேன் ..இல்லையெனில் சத்தியமாய் இங்கு வந்து இருக்க மாட்டேன் ..என்னை போன்று எததனை பேர் வந்து பார்த்தார்களோ…
ரஜினியின் சுய நலத்தை இங்கே பார்க்கவும்
http://lollushabha.blogspot.com/2011/12/blog-post_15.html
“ஊருக்கு தான் உபதேசம் எனக்கு இல்லை” – ரஜினி