காலைவணக்கம்
இன்றைய பாடல் : விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்
படம் : நூறாவது நாள் (1984)
இசை : இளையராஜா
பாடியது : எஸ்.பி.பி, ஜானகி
இளம்தம்பதியரின் காதல் மொழியும் உடல் மொழியுமாக மிக வசீகரமான பாடல்..நெருக்கம் கொஞ்சமே கொஞ்சம் தூக்கல் என்றாலும் நெருடாமல் கவரும்படி பார்த்துக்கொள்கிறது இசையின் இனிமை..
விழியிலே…
விழியிலே மணிவிழியில் மௌனமொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும் (2)
ஓ ஓ ஓ..அர்த்தஜாமங்களில் நடக்கும் இன்ப யாகங்களில்
கனி இதழ்களில் வேதங்கள் நீ ஓதலாம்..
விழியிலே..
கோடி மின்னல் ஓடி வந்து பாவை ஆனது (2)
இவள் ரதியினம் உடல் மலர்வனம்
இவள் மரகதம் அதில் மதுரசம்
இவள் காமன் வாகனம் இசை சிந்தும் மோகனம்
அழகைப் படைத்தாய் ஓ பிரம்ம தேவனே
விழியிலே….
காதல் தேவன் உந்தன் கைகள் தீட்டும் நகவரி(2)
இன்பச்சுகவரி அன்பின் முகவரி
கொஞ்சம் தினசரி என்னை அனுசரி
மழலையாகும் மாதிரி மடியில் தூங்கும் காதலி
விடிய விடிய என் பேரை உச்சரி
விழியிலே…
தொகுப்பு
..ஷஹி..
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments