ராணி

காதலும் கருப்பு அங்கிகளும்

  கருப்பு அங்கியணிந்த சிலரிடையே உனக்கான நானும் எனக்கான நீயும்…   நமக்கான நம் கண்மணிகள் உன்னோடு ஓரிரு வாரங்களும் என்னோடு ஓரிரு வாரங்களுமாம்…   நல்லது என்ற தொனியில் சந்தோஷிக்கும் நம் நலம் விரும்பிகளும் உறவுகளும்…   என்னை வலியவளாக்கிக் கொண்டிருந்த நம் காதல் -  ஓரிரு நொடிகளில் வறியவளாக்கிய அவலம்…   என் இதயச் சிதறல்கள் இன்னமும் உன் பேர் சொல்லியே துடித்துக் கொண்டிருக்கின்றன…   நம்முடைய காதலும், காதல் நிமித்தமும் ரத்தாகாமல் இருந்திருக்கலாம்…   ஒருவேளை புரிதலும், புரிதல் நிமித்தமும் நமக்குள் வலுப்பட்டிருந்திருந்தால்…!

ஒரு காதல் உரையாடல்-2

  காதலி : மௌனம் என்பது என்ன…? காதலன் : என் இதழ் பிரிக்காமல் உன் இதயத்திற்கு சொல்லப்படும் கவிதை…! காதலி : நிலவினை உங்களுக்குப் பிடிக்குமா…? காதலன் : உன் நிழலை எனக்குப் பிடிக்காமல் போய்விடுமா என்ன…? காதலி : பாறைகள் ஏன் உறுதியாயிருக்கின்றன…? காதலன் : உன்னைப் பார்ப்பதற்கு முன் நானும் அப்படித்தானே…! காதலி : அழகிற் சிறந்தவர் இவ்வுலகில் யார்…? காதலன் : என் விழிகளில் பார்…  அவைகள் எப்பொழுதும் பொய்யுரைத்ததில்லை…! காதலி : மலர்களில் தேன் எப்படி வந்தது…? காதலன் : அதிகாலையிலேயே எவருக்கும் தெரியாமல் நீ அவைகளை… Read more →