முகம் கவிழ்த்து
கூந்தல் விரித்து
பசியொடு காத்திருக்கும்
பிடாரியென…
நிராகரிப்பின் திடுக்கம் பாரித்த வெளிகளில்
விஷவிதைகள் முளைவிட்டுக் கிளைத்துச்செழிக்கும்
குரல்வளைகளை முறுக்கும்,குரோதம் வழியும்,
விழுதுகள் தாங்கி..
ஒளியெதும் புக விடா அடர்கண்காணிப்போடு.
செல்லக் கையூட்டுகள் திருப்தி அளிப்பதில்லை பிடாரிக்கு
ரத்தம்சொட்டச் சீவப்படும் உங்களின் “நான்” கள் அளவுக்கு…
..ஷஹி..
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments




அற்புதமான கவிதை ! ஆழ்ந்த அர்த்தங்கள்… ஒவ்வொரு முறை படிக்கும் போதும் ஒவ்வொரு அர்த்தம் ! அருமை ஷஹி !
மிக்க நன்றி…:)
செல்லக் கையூட்டுகள் திருப்தி அளிப்பதில்லை பிடாரிக்கு
அருமையான கவிதைக்கு பாராட்டுக்கள்.
ஷஹி,’
என்னைப்போன்றவர்களுக்கும் சட்டென்று புரியும்படி கொஞ்சம் எளிமை கலந்து எழுதலாமே…
கொஞ்சம் உயரத்தளத்தில் பயணிக்கிறது வார்த்தைகள்..
மறுபடியும் மறுபடியும் வாசித்து..
கவிதையை புரிந்துக் கொண்டேன்..
ஒருவேளை இதுதான் ஷஹியின் தனித்தன்மையோ??
வாழ்த்துக்கள்..