– புல்ஸ் ஐ ஆப்பம்
தேவையானவை
ஆப்பத்துக்கு
பச்சரிசி அரிசி – அரை டம்ளர்
புழுங்கல் அரிசி – அரை டம்ளர்
அவல் – ஒரு மேசை கரண்டி
ஜவ்வரிசி – ஒரு தேக்கரண்டி
உளுந்து – ஒரு மேசைகரண்டி
உப்பு – முக்கால் தேக்கரண்டி
ஆப்ப சோடா – கால் தேக்கரண்டி
தேங்காய் – நான்கு பத்தை துருவியது
வெந்தயம் – ஒரு அரை தேக்கரண்டி
புல்ஸ் ஐக்கு
முட்டை – 3
மிளகு தூள் - தேவைக்கு
உப்பு தூள் தேவைக்கு
செய்முறை
முதலில் இருவகை அரிசி அவல் ,உளுந்து,ஜவ்வரிசி, வெந்தயத்தை முன்று மணி நேரம் ஊறவைக்கவும்.
தேங்காய் அனைத்தையும் சேர்த்து அரைத்து உப்பு சோடாமாவு போட்டு 8 மணி நேரம் புளிக்க விடவும்.
ஆப்ப ச்சட்டியை காயவைத்து வெங்காயத்தை பாதியாக அரிந்து ஃபோர்க்கில் குத்தி எண்ணை சிறிது விட்டு சுற்றிலும் தேய்க்கவும். அப்பதான் ஒட்டாமல் பிஞ்சி போகாமல் வரும்.
ஒரு குழிகரண்டி ஆப்பமாவை உற்றி சுழற்றி விடவும்.
ஒரு முட்டையை கலக்காமல் அப்படியே ஊற்றி மேலும் சிறியதாக சுழற்றிவிட்டால் வெள்ளை கருமட்டும் எல்லா மாவிலும் படும். பிறகு முடி போட்டு 5 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்
நல்ல முக்கால் பாகம் வெந்து வரும் போது மிளகு உப்பு தூவி இரக்கவும்.
எண்ணையில்லதா முட்டையுடன் சத்தான டிபன், குழந்தைகளுக்கு காரமில்லாமல் சாப்பிட நல்லதொரு டிபன் அயிட்டம்.
தேவைக்கு இது போல் செய்து கொண்டு மீதிமாவில் பிளெயின் ஆப்பம் தேங்காய் பால் , சப்ஜி, சட்னியுடன் செய்து கொள்ளலாம்.
ஆக்கம்
ஜலீலா கமால்
துபாய்
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments














Please comment with your real name using good manners.