தங்க பஸ்பம்:
தங்க பற்பம் என்பதே சரியான வார்த்தை. பற்பம் என்றால் தூள் என்று பொருள். ஆனால், சொல் வழக்கில் ‘தங்க பஸ்பம்’ என்றாகிவிட்டது. சித்த மருத்துவத்தில், மிக உயர்ந்த உலோகமாக சொல்லப்பட்டுள்ள தங்கத்தை உடலுக்கும் , குடலுக்கும் தீங்கு விளைவிக்காததாக நன்கு பக்குவப்படுத்தி தயரிக்கப்படுவதுதான் ‘தங்க பஸ்பம்’. முறையாக பத்தியம் காக்காமல், இதைச் சாப்பிடுவது ஆபத்தானது. அதேபோல முறைப்படி தயாரிக்காததை சாப்பிட்டால், உள் உறுப்புகளான கல்லீரல், மற்றும் சிறுநீரகங்கள் பாதிக்கப்படும் என்பதால்தான், இதை தயாரிப்பதும் பயன்படுத்துவதும் குறைந்துவிட்டது. இப்போது, போலியாக தயாரித்து, மிக அதிக விலைக்கு விற்பனை செய்து , கொள்ளை லாபத்துக்கு ஆசைப்பட்டு ஏமாற்றுவதால், வாங்குபவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
இன்றைய நிலையில் முறையாக தங்க பஸ்பம் தயாரிப்பது கடினம். கன்னியாகுமரி மாவட்டத்தில் தங்கத்தை லேசாக பாலில் தேய்த்துக் கொடுக்கும் பழக்கம் முன்பு இருந்தது. இதனால், பொன் நிறமாகவும் நோய் எதிர்ப்புத் திறன் மிக்கதாகவும் குழந்தை இருக்கும் என்பது நம்பிக்கை. முடக்குவாதம், நீண்டகால உடல் மெலிவு, வயதான தோற்றம், உயிரணுத்தன்மை இல்லாதது போன்றவற்றிற்கும் தங்க பஸப்ம் அரிய மருந்தாகிறது.
^^^^^^^^^^^^^^^^^^^^^^
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments