நம் நாட்டில், நம் குழந்தைகளுக்கு நல்ல தரமான கல்வி கிடைக்கிறதா ?என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.தொடக்கக் கல்வியில் கூட தகுதி பெறாத ஒரு தலைமுறையே உருவாகிக் கொண்டிருக்கிறது என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
Annual status of education [ASER],Programme for international students assessment[PISA],Quality education study[QES]-இவற்றின் புள்ளி விபரம் தான் இந்தியக் குழந்தைகளின் இன்றைய நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றது.முந்தைய தலைமுறை குழந்தைகளுக்கு தெரிந்தது கூட இன்றைய குழந்தைகளுக்கு தெரியவில்லை என்றும்,கடந்த சில வருடங்களாக கணிதம் மற்றும் அறிவியலில் மாணவர்களின் திறன் 5 -10 % குறைந்திருக்கிறது என்றும் மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கமும் சுத்தமாக குறைந்துவிட்டது [இல்லை என்று கூட சொல்லலாம்]என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. . நாடெங்கிலும் தலை சிறந்த 89 நகர்ப்புற பள்ளிகளில் எடுத்த ஆய்வு முடிவுகள் என்ன கூறுகின்றது என்று பார்ப்போம்.
நான்காம் வகுப்பில் முக்கால்வாசி மாணவர்கள் ராஜீவ் காந்தியும் ,இந்திரா காந்தியும் உயிருடன் இருப்பதாக நினைக்கிறார்களாம்.
ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ,இரண்டாம் வகுப்பு பாடப்புத்தகங்களை வாசிக்கக் கூட தெரியவில்லை என்கிறது ஆய்வு முடிவுகள்.
நான்காம் வகுப்பு மாணவர்களில் பத்தில் ஒருவர் காந்தி இன்னும் உயிருடன் இருப்பதாக கூறுகிறார்கள்.
கல்வியில் சிறந்த தமிழ்நாட்டில் நான்காம் வகுப்பு மாணவர்களில் பாதிப் பேர் எட்டுக்கால் பூச்சிக்கு ஆறுகால் என்கிறார்களாம்.
அகமதாபாத்தில் தலைசிறந்த 8 தனியார் பள்ளிகளில் 8-ம் வகுப்பு படிக்குகும் பாதிப்பேர், பெண்கள் பள்ளிக்குச் செல்ல,படிக்க தேவையில்லை என்று நினைக்கிறார்கள்.
இமாசல பிரதேசத்தில் 90 % மாணவர்களுக்கு ஆங்கிலம் ம்ற்றும் தாய்மொழியை சரளமாக வாசிக்கவே தெரியவில்லை என்றும் 89 % மாணவர்கள் அறிவியலில் பின்னடைந்திருக்கிறார்கள் என்கிறது ஆய்வு.
ஆரம்பக்கல்வியில் தான் இந்த நிலை என்றில்லை.மேல்நிலைப்பள்ளிகளிலிலும்,கல்லூரிகளிலும் இதே நிலைதான்.அஸ்திவாரம் பலமாக இருந்தால் தானே கட்டிடம் பலமாக இருக்கும்.பள்ளிகளும்,பெற்றோர்களும் மாணவர்களை AIEEE,JEE,AIMEE மற்றும் பிற மாநில அரசுகளின் நுழைவுத் தேர்வுக்குத்தான் நிர்ப்பந்திக்கிறார்கள்.தனியார் பள்ளிகள் 100 % தேர்ச்சியையும்,எத்தனை மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் கிடைத்திருக்கிறது என்கிற புள்ளி விபரத்தையும் காட்டி கல்வியை காசாக்குகிறார்கள்.
ஓரளவு படிக்கும் மாணவர்கள் தொழிற்கல்விக்குச் சென்று விடுவதால் கணிதம் மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகளுக்கும்,ஆராய்ச்சிகளுக்கும்,கண்டுபிடிப்புகளுக்கும் வழிவகை இல்லாமல் போய்விடுகிறது.சி.வி ராமன்களும்,சீனிவாச ராமானுஜர்களும்,அமர்த்தியா சென்களும் இல்லாமலேயே போய்விடுவார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
இந்தியாவின் தலை சிறந்த கல்வி நிறுவனமான IIT-யிலும் இதே நிலை தான்.ஒரு சிலர் தான் பெரிய அளவில் சாதிக்கிறார்கள்.மற்ற அனைவரும் தேர்ச்சி பெறவே திணறுகிறார்கள்.ஆங்கில அறிவு சுத்தமாக குறைந்துவிட்டது.மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்து தற்கொலைகள் அதிகரித்திருக்கின்றன.
2010-ல் சீனா சமர்ப்பித்த அறிவியல் ஆய்வுகள் கிட்டத்தட்ட 10 லட்சத்திற்கும் மேல்.இந்தியர்களால் 2 லட்சத்திற்கும் குறைவான அறிவியல் ஆய்வுகள் தான் சமர்பிக்கப்பட்டுள்ளது. இதுவே அறிவியல் சார்ந்த படிப்புகளுக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவுக்கு ஒரு சான்று.
இந்தியாவில் கல்வியின் நிலை குறித்து மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபிலிடம் கேட்ட பொழுது அவர் ,இது ஒரு சிக்கலான பிரச்சினை என்றும்,60 ஆண்டுகளாக இருக்கும் கல்வி முறையை ஒரே இரவில் மாற்றிவிட முடியாது என்றும் கூறினார்.மேலும் அவர் ,கிட்டத்தட்ட 1.2 மில்லியன் ஆசிரியர்கள் பற்றாக்குறையும்,வயதிற்கு தகுந்த பாடப்புத்தகங்கள் வழங்கப் படாததும் தரமான கல்வி கிடைக்காததற்கு காரணங்களாக கூறினார்.தரமான கல்வியை வழங்குவது மாநில அரசுகளின் கட்மை என்றும்,எந்த மாநில அரசும் கல்விக்கு போதுமான நிதி ஒதுக்குவதில்லை என்று மாநில அரசுகளை குற்றஞ்சாட்டினார்.அத்துடன் மட்டுமில்லாமல் நம் அரசுப்பள்ளிகளின் நிலையை ,தரத்தை தனியார் பள்ளிகளின் நிலைக்கு உயர்த்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்.[மேலே எடுக்கப்பட்டிருக்கும் புள்ளிவிபரங்களில் இந்தியாவின் தலை சிறந்த தனியார் பள்ளிகளும் அடக்கம்] .தனியார் பள்ளிகளுக்கு பணம் சம்பாதிப்பதில் தான் நாட்டம்,தரமான கல்வி தர வேண்டுமென்பதில்லிலை என்ற கூற்று அவருக்கு தெரியாது போலும்.
“கல்விக் கொள்கையைப் பொறுத்தவரை நீண்ட காலத் திட்டம் என்பது அரசிடம் கிடையாது. முதலீடு செய்தால், அதன் பலன் எப்படி இருக்க வேண்டும் என்ற தெளிவு இல்லை. கல்வியைப் பொறுத்தவரை ஒரு திட்டத்தை செயல்படுத்தும்போது, அதன் பலன் எப்படி இருக்க வேண்டும் என்று யாரும் கவலைப்படுவதில்லை. கல்வியின் தரத்தை மேம்படுத்தாமல், ஆசிரியர்களின் ஊதியத்தை அதிகரிப்பது எந்த விதத்திலும் பலன் தரப்போவதில்லை. பல அரசு தொடக்கப் பள்ளிகளில் நல்லமாதச் சம்பளம் பெறும் ஆசிரியர்கள், வகுப்புகளுக்கே சரியாக வருவதில்லை. இப்படி இருந்தால் தொடக்கக் கல்வியில்கூட முறையாக, தகுதி பெறாத ஒரு தலைமுறையே உருவாகும்” என்பது நிச்சயம்.
நிற்க…உலகப் புகழ் பெற்ற வார இதழான ,”TIME ” அதன் நவம்பர் 21-ம் தேதி இதழில் கவர் ஸ்டோரியாக சீனா vs இந்தியா, ‘இனி வரும் ஆண்டுகளில் உலகை ஆளப்போவது யார் ?”என்ற கட்டுரையை வெளியிட்டிருக்கும் இவ்வேலையில், இந்தியாவில் தான் அதிகளவில் இளைஞர்கள் இருக்கிறார்கள்,2020-ல் இந்தியா வல்லரசாகிவிடும் என்று நாம் நம்பிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் எதிர்கால இளைஞர்களின் இன்றைய கல்வியின் நிலை தரமானதாக இல்லை என்பது வேதனையான விஷயம்.சுதந்திர இந்தியாவில் எதற்கெல்லாமோ கோடிக் கணக்கில் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், மக்களின் அடிப்படைத் தேவைக்கு சில சதவிகிதம் மட்டுமே நிதி ஒதுக்க முடிகிறது. அதிலும் தொடக்கக் கல்விக்கு ஒதுக்கப்படும் நிதி, வெறும் ஆறு சதவிகிதம் மட்டுமே.
இந்தியாவில் இளைஞர்கள் தொகை அதிகமாக இருப்பது நம் வளர்ச்சிக்கு ஆதாயமாகும்.ஆனால் அவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்படாத போது இந்த இளைஞர்களால் கேடுகளே அதிகமாகும் என்பது உண்மை..
அதனால் இந்தியா தன் கல்வித்துறையை மேம்படுத்தி,நம் குழந்தைகளுக்கு [எதிகால இளைஞர்களுக்கு] தரமான கல்வி கிடைக்க வழிவகை செய்தால் தான் எதிர்காலத்தில் இந்தியா வல்லரசாகி உலகை ஆளும்.JAIHIND!!!!. .

மூலம்:”Uncool Schooling”-article in outlook magazine.
தொகுப்பு:diet-b












சாட்டையடி கட்டுரை பானு ! மிக அருமை !
Thank you Abhi.